tamilnadu

வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு

தேனி:
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதி பாசனத்திற்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறப்பதைத் தொடர்ந்து வைகை அணையிலிருத்து 2022 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மதுரை, மேலூர், கள்ளந்தரி, பேரணை பகுதி பாசனத்திற்காகவும், மாநகர குடிநீருக்காகவும் 1872 கனஅடிநீர் திறக்கப்பட்டது.திருமங்கலம் பகுதிக்கும் தண்ணீர் திறக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதிக்கு 150 கனஅடிநீர் என மொத்தம் 2022 கனஅடிநீர் புதன்கிழமை காலை முதல் திறந்துவிடப்பட்டுள்ளது .இதனால் வைகையாற்றில் நீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. ஆற்றங்கரையோரம் வ சிக்கும் மக்கள்பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  ஆற்றில் துணி துவைப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடவேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.ஆற்றைக் கடக்க பாலங்களை பயன்படுத்த வேண்டும். நீர் அதிகமாக வருவதால் ஆற்றில் இறங்கவேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.