தேனி, மே 23- தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதில் மாவட்ட நிர்வா கம் அலட்சியமாக உள்ளது. மக்களின் பிரதான பிரச்சனைகளை தீர்க்க முன் வராத தேனி மாவட்ட ஆட்சியரை கண்டித்து மே 29- ஆம் தேதி ஆட்சி யர் அலுவலகததை முற்றுகையிடப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேனி மாவட்ட செயலாளர் டி. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறி க்கை:- தேனி மாவட்டத்தில் ஜெயமங்க லம், லட்சுமநாயக்கன்பட்டி,போடி, ஓடைப்பட்டி, ஆண்டிப்பட்டி பகுதி களில் கொரானோ தொற்று வேகமாக பரவியுள்ளது. கொரானோ தொற்று கண்டறியப்பட்ட ஓடைப்பட்டியில் மக் கள் சுதந்திரமாக நடமாடி வருகின்ற னர். அதே நேரத்தில் தோட்ட வேலை களுக்குச் செல்பவர்கள் தடுக்கப்படு கின்றனர்.
இதனால் ஓடைப்பட்டியில் இதுவரை 15 பேர் பாதிக்கப்பட்டு ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட முகாம் களில் மருத்துவர்கள் பணியில் இல்லா ததால் சசிக்குமார் என்ற வாலிபர் தற் கொலை செய்துகொண்டார். மார டைப்பு ஏற்பட்டு வேலுசாமி என்ற தொழி லாளி உயிரழிந்துள்ளார். கேரளாவிலி ருந்து வரும் போது காட்டு தீயில் சிக்கி உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்திற்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆறுதல் தெரிவிக் காதது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது . குவைத் நாட்டில் உயிருக்குப் போராடிவரும் தனது மகனை காப் பாற்ற வேண்டும் எனக்கேட்டு மனுக் கொடுக்க வந்த பெற்றோரை நேரில் சந்திக்காமல், உதவியாளரிடம் மனு கொடுக்க சொன்னது பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்துவரும் வாழை, திரா ட்சை, தென்னை, முருங்கை போன்ற வைகளை விற்பனைக்கு கொண்டு போக முடியாமல் செடி, மரங்களி லேயே அழுகி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் தமிழகத்தைச் சோ்ந்த ஆயிரக்கனக்கான விவசாயி கள், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் கடந்த 50 நாட்க ளுக்கு மேலாக ஏலத் தோட்டங்க ளுக்குச் செல்ல முடியாமல் அவ திப்பட்டு வருகிறார்கள். மலை மாடு களை வனப்பகுதிகளில் அனுமதி நட வடிக்கை எடுக்கவேண்டும். கொரோனா காலத்தில் ஏழை மக்களிடம் வட்டி, அசல், தவணை பணம் கேட்டு, தொல்லை தரும் மைக்ரோ பைனாஸ், அடகுக்கடைகள் மற்றும் நிதி நிறு வனங்கள் மீது உடனடியாக நட வடிக்கை எடுக்கவேண்டும்.
தேனி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் கடந்த 50 நாட்களாக வேலையின்றி தவிக்கும் பதிவு செய்த ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டு மென வலியுறுத்தி தேனி ஆட்சியர் அலு வலகம் முன்பு மே மாதம் 29- ஆம் தேதி காலை 10.00 மணிக்கு முற்று கைப்போராட்டம் நடைபெறும்.
மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது
கம்பம் அரசு மருத்துவமமனையில் அடிப்படை கட்டமைப்பு இல்லாத நிலையில் கொரோனா சிகிச்சை மேற் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சியினரை காவல்துறை யினர் கைது செய்தனர். கம்பம் அரசு மருத்துவமனையில் அவசரகதியில் ஏற்படுத்தபட்ட கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட முத்துலாபுரத்தை சேர்ந்த மூன்று மற்றும் ஏழுவயது குழந்தைகள் அனு மதிக்கப்பட்டுள்ளனர். கம்பம் அரசு மருத்துவமனை “சீமாங் சென்டர்” என்ற தரத்தோடு மாவட்ட அளவில் அதிக பிரசவம் பார்க்க கூடிய மருத்துவமனை. சிசுக்கள் பரா மரிக்கும் பிரிவும் செயல்பட்டு வரு கிறது . கம்பம் மருத்துமனையில் கொரோனா தொற்று சோதனை செய்வதற்கான அடிப்படை வசதிகள் இல்லை.
இந்த நிலையில் கொரோனவிற்கு கம்பம் மருத்துவமனையில் சிகிச்சை யளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வி.அண்ணாமலை ,ஏரியா செய லாளர் ஜி.எம்.நாகராஜன் ,மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.ஆர்.லெனின், பன்னீர்வேல், கர்ணன், பாலகுரு நாதன், சுருளிவேல் குமார் ஆகி யோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
போலி அனுமதிச் சீட்டு; நான்கு பேர் கைது
போலி அனுமதிச் சீட்டு மூலம் மகா ராஷ்டிராவில் இருந்து தேனி மாவட் டத்திற்கு ஆட்களைஏற்றி வந்த இரண்டு ஆம்னி பேருந்துகளை காவல் துறையினர் பறிமுதல் செய்து நான்கு பேரை கைது செய்தனர். மதுரை மாவட்டத்தில் இருந்து தேனி மாவட்டத்தை நோக்கி வந்த இரண்டு ஆம்னி பேருந்துகளை நிறுத்தி காவல்துறையினர் ஆவ ணங்களை சோதனை செய்த போது, போலி அனுமதிச் சீட்டு வைத்தி ருந்தது தெரியவந்தது. அந்தப் பேரு ந்து மகாராஷ்டிரா மாநிலம் தாராவி பகுதியில் இருந்து தலா 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு தேனி மாவட்டத்திற்கு வந்தது தெரியவந்தது. இதனை யடுத்து பேருந்தில் வந்த அனைத்து பயணிகளும் தனிமைபடுத்தும் முகா மிற்கு அனுப்பப்பட்டனர். இரண்டு ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்து, பேருநது உரிமையாளர் சண் முகநாதன், மேலாளர் செந்தில்கும ரன், பேருந்துகளின் ஓட்டுநர்கள் ராமையா, பிச்சைமணி ஆகியோரை காவல்துறையில் கைது செய்தனர்.
கொரோனா பரவல் அதிகரிப்பு
தேனி மாவட்டத்தில் வெள்ளிக் கிழமை மாலை மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது. தேனி அரரு மருத்து வமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்த 47 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த நிலையில், மதுரை, திடீர் நகர் பகுதியில் அடிதடி வழக்கில் கைதான நான்கு இளைஞர்கள் தேனி மாவட்ட சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர். முன்னதாக, மதுரை யில் இவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 19 வயதுடைய இளைஞர் ஒரு வருக்கு தொற்று உறுதி செய்யப்பட் டது. அந்த இளைஞர் தேனி மாவட்டச் சிறையிலிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல் லப்பட்டார்.