tamilnadu

img

மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்து தேனியில் ஆர்ப்பாட்டம்

தேனி:
பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து அகில இந்திய எதிர்ப்பு தினத்தையொட்டி  தேனிமாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தேனிநகரில் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் இ.தர்மர், மாவட்டச்செயலாளர் டி.வெங்கடேசன் சி.முனீஸ்வரன், டி.நாகராஜ், தாலுகாக்குழுஉறுப்பினர்கள் வி.என்.ராமராஜ், வி.ராஜேந்திரன், ஏ.சி.காமுத்துரை, டி.ஜெயப்பாண்டி  சிஐடியு  மாவட்டப்பொருளாளர் ஜி.சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

கம்பத்தில்  எஸ்.சின்னராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏரியா செயலாளர் ஜிஎம் நாகராஜன், பி.ஜெயராஜ் எஸ் பன்னீர்வேல், பி.அய்யப்பன்,  ஐ. பாலகுருநாதன் பெ அய்யப்பன், பரமராஜ்,  ஆத்ம கணபதி, ஷேக் அப் துல்லா, சி.குமார்,  எஸ்.உசேன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்  உத்தமபாளையம் ஏரியா குழு சார்பில் கோம்பையில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் .எல்ஆர்.சங்கரசுப்பு, ஏரியா செயலாளர் வேலவன்.எஸ்.சுருளிவேல்.வி.மோகன்.எஸ் .சஞ்சீவிகுமார் மற்றும்பெருமாள்.ராஜா, மனோகரன், லட்சும ணன், ராமு.உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஆண்டிபட்டியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  சி.பாலசந்தர் ,வி.சின்னன் ,எஸ்.மாரிமுத்து , எஸ்.தங்கவேல் மற்றும் காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் .போடி ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் மீனா தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.ராஜப்பன் ,தாலுகா செயலாளர் எஸ்.செல்வம், பி.சந்திரசேகர் ,செல்லத்துரை ,செல்லப்பாண்டி ,தங்கபாண்டி ,முருகவேல், மூக்கையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் .சின்னமனூரில் ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.ஆறுமுகம் தலைமையில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ஏ.வி.அண்ணாமலை,  எஸ்.பொம்மையன் ,மணிகண் டன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;