tamilnadu

img

கொரோனா பாதிப்பில் மீண்ட 18 பேர்... மகிழ்ச்சியில் தேனி மாவட்ட மக்கள்

தேனி:
தேனி  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக  சிகிச்சை பெற்று வந்த 18பேர் வியாழன்று  குணமடைந்து வீடு திரும்பியதை தொடர்ந்து தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இதுவரை 41பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர் . இதில் போடியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். மீதமுள்ள 40பேருக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.இதில் 18 பேர் தொடர் சிகிச்சை காரணமாக குணமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து வியாழனன்று வாகனத்திற்கு  இருவர் வீதம் 9 வண்டியில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 8 பேர் போடி, 3பேர் பெரியகுளம், 4 பேர்அல்லிநகரம், கம்பம், சின்னமனூர், உத்தமபாளையத்தைச் சேர்ந்த தலா ஒருவர் வீதம் ஆவர். வீட்டிற்குச் சென்றாலும் அங்கு இவர்கள் 14நாட்களுக்கு தனிமைப்படுத்தி தொடர் சிகிச்சை அளிக்கப்படும். அதன்பின்பு மீண்டும் ரத்த பரிசோதனை செய்யப்படும்.
 

;