tamilnadu

img

டிக் டாக் வீடியோ : ஆற்றில் மூழ்கிய வாலிபர்

ஆற்றில் டிக் டாக் வீடியோ எடுக்க ஆசைப்பட்ட வாலிபர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்த மூன்று வாலிபர்கள் கப்பலால் தடுப்பணைக்கு குளிக்க சென்றுள்ளனர். இதையடுத்து ஆற்று தடுப்பணையின் நடுவே நின்று டிக் டாக் வீடியோ எடுத்தபோது, திடீரென ஏற்பட்ட தண்ணீர் வரத்தால் மூன்று பேரும் அடித்து செல்லப்பட்டனர். அவ்விபத்தில் இரண்டு பேர் தப்பித்து உயிருடன் கரை ஏறிய நிலையில் தினேஷ் என்பவர் மட்டும் அடித்து செல்லப்பட்டார். இந்நிலையில் நீரில் மூழ்கிய வாலிபரை 48 மணி நேரமாக தேடப்பட்ட வந்தநிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவரது நண்பர்களிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  


 

;