tamilnadu

img

விஷம் கலந்த கேக்கை சாப்பிட்டு பலியான மகன் மற்றும் தந்தை

தெலுங்கானாவில் விஷம் கலந்த கேக்கை சாப்பிட்ட மகன் மற்றும் தந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டத்தை சேர்ந்த ரவி என்பவர், தனது மகன் ராம்சரணின் 9 வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கேக் வாங்கி வந்துள்ளார். மாலையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி மகிழ்ந்துள்ளனர். சற்று நேரத்தில் மயங்கி விழுந்த 2 குழந்தைகளையும், அவர்களது தாய் தந்தையரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரவியும், சிறுவன் ராம்சரணும் புதன்கிழமை இரவே உயிரிழந்துள்ளனர். தாய் பாக்கியலட்சுமி மற்றும் சிறுமி பூஜிதா ஆகியோருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஷம் கலந்த கேக்கை சாப்பிட்டதாலேயே சிறுவனும், தந்தையும் பலியானது அம்பலமான நிலையில், சம்பவம் குறித்து தெலங்கானா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப சொத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறால், உயிரிழந்த ரவியின் சொந்த தம்பியான சீனிவாஸ் என்பவனே பிறந்தநாள் கேக்கில் விஷம் வைத்தது தெரியவந்துள்ளது. இதை அடுத்து, தலைமறைவாகியுள்ள சீனிவாசை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், இது குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.