tamilnadu

தென்காசி மாவட்டத்தில்  342 பேர் டிஸ்சார்ஜ்  

தென்காசி  ஜூன 30- தென்காசி மாவட்டத்தில் 4 பேர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால்  பாதிப்பு எண்ணிக்கை 342 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் குணமடைந்தோர் 198 பேர் வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர்.144 பேர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தென்காசி மாவட்டத்தில் இதுவரை 17,438 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. செவ்வா யன்று மட்டும் 581 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. செவ்வாயன்று 4 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 4 பேர்களும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 35 பேர்கள் கொரோனா அறிகுறியுடன் மருத்துவ பரிசோத னைக்கு வந்தனர்.தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 342 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் பூர்ண குணமாகி வீடுகளுக்கு அனுப்பப்பட்டோர் எண்ணிக்கை 198 ஆக உயர்ந்துள்ளது. செவ்வாயன்று மட்டும் 42 பேர்கள் பூரண குணமாகி தங்களின் வீடுகளுக்கு சென்றுள்ளனர். 144 பேர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.