தூத்துக்குடி, ஜூன் 13- தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் சீதக்காதி தெரு வைச் சேர்ந்தவர் பீர்முகம்மது மகன் வருசைமுகம்மது (18). ஆறுமுகநேரியில் உள்ள ஒர்க்ஷாப்பில் வேலைபார்த்து வந்தார். இவர் வெள்ளியன்று தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற தால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தி வருகிறார்.