தூத்துக்குடி, ஆக.3- தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி, வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் முத்துராஜ் (29), ஆட்டோ டிரைவர். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று ஆட்டோ வாங்கினாராம். ஊரடங்கால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் கடந்த 4 மாதங்களாக தவணை செலுத்த முடிய வில்லையாம். இதனால் நிதி நிறுவனத்தினர் அந்த ஆட்டோவை பறிமுதல் செய்து விட்டார் களாம். இதில் மனவேதனையடைந்த முத்து ராஜ் சம்பவத்தன்று தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக புளியம்பட்டி காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.