உத்தரப்பிரதேசத்தில் சிறுமி பாலியல் படுகொலையை கண்டித்து தூத்துக்குடி புறநகரில் மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்டச் செயலாளர் பூமயில், புறநகர் தலைவர் சரஸ்வதி, உப்பு தொழிலாளர் சங்கம்(சிஐடியு) மாவட்ட செயல் தலைவர் ராமசாமி, சிபிஎம் கக்கன்ஜி நகர் கிளை செயலாளர் ஆறுமுகம், முன்னாள் செயலாளர் சண்முகவேல் கலந்து கொண்டனர்.