tamilnadu

தற்கொலை செய்த பெண்ணின் உடல் எரிப்பு: கணவர் கைது

தூத்துக்குடி, ஜூன் 3- சங்கரலிங்கபுரம் அருகே தற் கொலை செய்த பெண்ணின் உடலை தக னம் செய்தது தொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உறவினர்கள் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்க புரம் ரகுநாத புரத்தைச் சேர்ந்தவர் சீனி மகன் வேல்முருகன் (41) இவரது மனைவி மாயாதேவி (28) இந்த தம்பதியருக்கு கடந்த 18.4.2010-இல் திருமணம் நடந் தது. 2 குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் மாயாதேவியின் தங்கைக்கு 3 ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த திருமணத்திற்கு செல்ல வேண்டுமென மாயாதேவி தனது கணவரிடம் கூறியபோது அங்கு செல்ல வேண்டாம் என்று கூறினாராம்.

இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் மனவேதனை அடைந்த மாயாதேவி கடந்த 1 ஆம் தேதி அங்குள்ள கிணற்றில் குதித்து தற் கொலை செய்து கொண்டார். அவரது உடலை உறவினர்கள் போலீ சாருக்கு தகவல் தெரிவிக்காமல் எரித்து தகனம் செய்துள்ளனர். இதுகுறித்து வவ்வால் பட்டி விஏஓவுக்கு தகவல் கிடைத்தது. அவர் சங்கரலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் விசாரணையில் தற்கொலை செய்த பெண்ணின் உடலை தகனம் செய்தது தெரியவந்தது. இது தொடர் பாக அவரது கணவர் வேல்முருகனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரது உறவினர்கள் 13பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.