தூத்துக்குடி, ஜூன் 23- வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இணையதளத்தில் பதிவு செய்து, தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற லாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரி வித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் வேலைநாடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் ஆன்லைன் மூலம் இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் நோ க்கத்தில், வேலைவாய்ப்பு மற்றம் பயிற்சி துறையின் மூலம் www.tnprivatejobs.tn.gov.in என்ற தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளை ஞர்கள், இந்த இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து, தங்களது கல்வித்தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ப பணி வாய்ப்புகளை பெறலாம்.
தனியார் துறை சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலிப் பணியி டங்களை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அந்த பணிக்கு தகுதியான நபரை தேர்வு செய்து பணி நியமனம் செய்யலாம். வேலை அளிப்போர் மற்றும் வேலை நாடுநர்க ளுக்கு இந்த சேவை கட்டணம் இன்றி இலவசமாக வழங்கப்படு கிறது. ஏற்கனவே அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லகங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது இதற்கு மாற்றாக, தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் இணையவழி நேர்கா ணல் மற்றும் இணையவழி பணி நியமனம் செய்யலாம். இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்ப டுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.