tamilnadu

மாணவர் கொலை மேலும் இருவர் கைது

தூத்துக்குடி, ஜூன் 3- ஆத்தூர் அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி கிரா மத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் சத்தி யமூர்த்தி (22). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த மாதம் 29 ஆம் தேதி மாலையில் அவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஆறுமுக நேரி இன்ஸ்பெக்டர் பத்திரகாளி தலை மையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ் வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேரை திங்க ளன்று தனிப்படை போலீசார் கைது செய்து திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் சிலரை போலீ சார் தேடி வந்த நிலையில் கீழ கீரணூர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (24), இசக்கி முத்து (20) ஆகிய இருவரையும் போலீ சார் செவ்வாயன்று கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

;