ரவுடி கொலை வழக்கில் மேலும் 5பேர் கைது
தூத்துக்குடி, செப். 2 தூத்துக்குடி ரவுடி ஜிந்தா சரவணன் கொலை வழக்கில் மேலும் 5பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு, கேவிகே நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைப்பாண்டி மகன் சரவணன் என்கிற ஜிந்தா சரவணன் (38). இவர் கடந்த 27ம்தேதி அன்று தனது வீட்டில் இருந்த போது, மர்ம நபர்க ளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தூத்துக் குடி மத்திய பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் மஹாராஜன் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி, பூபால்ராயபுரத்தைச் சேர்ந்த வரும், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி இந்திரா நகரில் வசித்து வரும் பிரவுன் மகன் ஜான்சன் (40), மற்றும் திரு நெல்வேலி பழைய பேட்டையைச் சேர்ந்த மாடசாமி மகன் மொட்டைச்சாமி(25), தூத்துக்குடி போல்டன் புரத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் மகன் ஹரி என்ற மண்ணெண்ணெய் ஹரி, ஏ.சண்முகபுரத்தைச் சேர்ந்த வேல்ராஜ் மகன் முத்து குமார் (32), ஜெயராஜ் மகன் கார்த்திக் பாலன் (39), ஆகிய 5 பேரையும் மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் திங்களன்று கைது செய்தார்.
கடையநல்லூரில் புதிய வி.தொ.ச கிளைகள் அமைப்பு
திருநெல்வேலி ,செப். 2- நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் புதிதாக விவசாய தொழிலாளர் சங்கம் துவக்கப்பட்டது. புதிதாக துவக்கப்பட்ட இடைக்கால் வி.தொ.ச கிளைக்கு தலைவராக மேரி,செயலாளராக மகாலெட்சுமி, பொரு ளாளராக செல்வி,துணை தலைவராக முத்துலெட்சுமி ஆகி யோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் ,இடைக்கால் 1ஆவது புதிய கிளைக்கு தலைவராக பரமேஸ்வரி,செயலாளராக மணி மேகலை,பொருளாளராக பார்வதி,துணை தலைவர்க ளாக மல்லிகா,மாரியம்மாள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர், இடைக்கால் 2ஆவது கிளைக்கு தலைவராக மாரிச் செல்வி,செயலாளராக மீனா, பொருளாளராக ராம லட்சுமி,துணை தலைவராக சரஸ்வதி ,துணை செயலாளராக குருவம்மாள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இடைக்கால் 3ஆவது கிளைக்கு தலைவராக கிருஷ்ணவேணி ,செயலாளராக இசக்கியம்மாள், பொரு ளாளராக சுப்புலட்சுமி,துணை தலைவராக செல்லம்மாள், துணை செயலாளராக முத்துலெட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர், இதே போல இடைக்கால் 4ஆவது புதிய கிளைக்கு தலைவராக வசந்தா,செயலாளராக இந்திரா, பொருளாளராக கலையரசி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர் ,அதே போல் சிவராம் பேட்டையில் துவக்கப்பட்ட புதிய கிளைக்கு தலைவராக வேலம்மாள்,செயலாளராக லலிதா,பொருளாளராக செல்வி ,துணை தலைவராக குருவம்மாள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய கிளை துவக்க விழாக்களில் 100 நாள் வேலை திட்டத்தை அனைவருக்கும் வழங்கிடுக,சுழற்சி முறையில் வேலை கொடுப்பதை கைவிடுக, சட்டக்கூலி ரூ.230 வழங்கிடுக,ரேசனில் அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்கிட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிளைகள் துவக்க விழாவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் தி.கணபதி, வட்டார தலைவர் செல்லத்துரை,வட்டார பொருளாளர் ஞானபிரகாசம், நிர்வாகிகள் சுப்பையா,முருகையா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மைனர் பெண்ணை கடத்தியவர் ஜாமீனில் வந்து தகராறு: 2பேருக்கு கத்திக்குத்து
தூத்துக்குடி, செப். 2 தூத்துக்குடியில் மைனர் பெண்ணை கடத்தியதாக போக்ஸோ சட்டத்தில் கைதான வாலிபர், தனது நண்பர்களுடன் சேர்ந்து தகராறில் ஈடுபட்டு 2பேரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படு த்தியுள்ளது. தூத்துக்குடி அண்ணா நகர் 10வது தெருவைச் சேர் ந்தவர் சூடாமணி மகன் சுடலைமணி (19). இவர் அப் பகுதியில் உள்ள மைனர் பெண்ணை கடத்திச் சென்ற தாக சிப்காட் காவல் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட் டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். தற்போது ஜாமீனில் வந்த அவர், தான் கைது செய்யப் பட்டதற்கு அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் மாரியப்பன் (57) என்பவர் தான் காரணம் என்று கருதி அவரது வீட்டிற்கு தன் நண்பர்களுடன் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை மாரியப்பனின் மகன்கள் லட்சுமணன் (24), மகேஸ்குமார் (24) ஆகிய இருவரும் தட்டிக் கேட்டுள்ள னர். இதையடுத்து சுடலை மணி மற்றும் அவரது நண்பர் கள், அவர்களை கத்தியால் குத்தியும் கம்பால் தாக்கியும் கொல்ல முயன்றுள்ளனர். மேலும் தகராறில் ஈடுபட்ட அவர்கள், தெருவில் உள்ள 6 டியூப் லைட்டுகளை அடித்து நொறுக்கி சேதப் படுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அருண் பாலகோபா லன், டவுண் டிஎஸ்பி பிர காஷ், சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதுதொடர்பாக போலீ சார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து அண்ணா நகர் 10வது தெருவைச் சேர்ந்த ஜெயகுமார் மகன் மணிகண்டன் (19), வேல்முரு கன் மகன் நாகராஜன் (18) ஆகிய 2பேரை கைது செய் துள்ளனர். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த சூடா மணி மகன் சுடலைமணி, பேச்சிமுத்து மகன் ராஜேஸ் கண்ணன், கேவிகே நகரைச் சேர்ந்த மகராஜன், பாலாஜி ஆகிய 4பேரை தேடி வருகின்றனர்.
கொலையில் தொடர்புடையவர் வழிப்பறியில் கைது
திண்டுக்கல், செப்.2- திண்டுக்கல் முத்தழகு பட்டியைச் சேர்ந்தவர் புள்ளு வெட்டியான் என்ற சார்லஸ். இவர் பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து தெற்கு காவல்நிலைய ஆய் வாளர் சரவணன் அறிவுறுத்த லின் பேரில் சார்பு ஆய்வாளர் வேலுமணி, ஷேக்தாவூது ஆகி யோர் சம்பவ இடத்திற்கு சென்று சார்லசை கைது செய்னர். (நநி)