தூத்துக்குடி, ஜூன் 23- தூத்துக்குடி மாவட்டத்திற்கு முழு ஊர டங்கு தேவையில்லை, அதற்கான அவசிய மும் ஏற்படவில்லை என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார். சமுத்திர சேது ஆபரேசன் மூலம் மால த்தீவில் இருந்து 198 இந்தியர்களை அழைத்து கொண்டு ஐ.என்.எஸ் ஐராவத் கடற்படை கப்பல் தூத்துக்குடி துறைமுகம் வந்த டைந்தது. தமிழகத்தை சேர்ந்த 195 பேர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் உட்பட 198 பேர் வந்தனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் துறைமுக சபை அதிகாரிகள் வர வேற்றனர். கப்பல் மூலம் வந்த அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, இதனை தொடர்ந்து குடியுரிமை சோத னைக்கு பின்னர் தங்களது சொந்த ஊர்க ளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேசுகை யில், ‘’வெளிநாட்டில் சிக்கி தவித்த இந்தி யர்களை தாயகம் அழைத்து வரும் பொருட்டு மத்திய அரசின் சமுத்திர சேது திட்டத்தின் கீழ் மூன்றாவது கப்பல் தூத்துக்குடி துறை முகத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் மூலமாக இரண்டு முறை பயணிகள் அழைத்து வரப்பட்டுள்ளனர். செவ்வாயன்று வந்த ஐஎன்எஸ் ஐரா வத் கப்பலில் நெல்லை, தூத்துக்குடி, விருது நகர், இராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 25 பேர் உள்பட மொத்தம் 200 பேர் வந்துள்ள னர். இதில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 64 பேர் உள்ளனர்.
அடுத்த கட்டமாக ஜூன் 28 ஆம் தேதி ஈரான் நாட்டிலிருந்து 700 இந்தியர்களை தூத்துக் குடி அழைத்து வருவதற்கான நடவடிக்கை கள் எடுக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவ ட்டத்தில், வெளியிலிருந்து வந்தவர்கள், ஏதே னும் நிகழ்ச்சி மூலம்தான் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதுவரை சமூக தொற்று ஏற்படவில்லை. முழுமையாக கட்டுப்ப டுத்துவதற்கு தேவையான அத்தனை ஏற்பா டுகளையும் செய்து வருகிறோம். தொற்று உறுதி என கண்டறியப்பட்ட பகுதிகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே இப்போதைக்கு தூத்துக்குடி மாவட்ட த்திற்கு முழு ஊரடங்கு தேவையில்லை. அதற்கான அவசியங்கள் ஏற்படவில்லை’’ என்றார்.