தூத்துக்குடி, ஜூலை 27- “எங்கள் குடும்பம் அடைந்துள்ள வேதனையிலி ருந்து மீள்வதற்கு தமிழக அரசு அரசு வேலை வழங்கி யுள்ளது” என சாத்தான்குளம் ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிஸ் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வழங்கிய அரசுப் பணிநியமன ஆணையைப் பெற்ற பிறகு பெர்சிஸ் செய்தியாளர்க ளுக்கு அளித்த பேட்டி: நான் இறந்து போன ஜெயராஜ் மூத்த பெண் பெர்சிஸ். எனது தந்தையும், தம்பியும் சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்ததையடுத்து கருணை அடிப்படையில் எனக்கு வருவாய்த் துறையில் இளநிலை உதவியாளராக அரசால் பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. எங்கள் குடும்பம் அடைந்துள்ள வேதனையிலிருந்து மீள்வதற்கு தமிழக அரசு இந்த வேலையை எனக்குக் கொடுத்துள்ளது.
முதலமைச்சர், சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததுடன், அதை நியாயமான முறையில் விசாரித்து, தவறு செய்தவர்க ளுக்கு தண்டனை பெற்றுத் தருவோமென்று எங்களுக்கு உறுதி அளித்துள்ளார். இந்த விஷயத்தில் எங்களுக்கு ஆதரவு அளித்த தமிழக அரசு, தமிழக மக்கள், அனைத்துக் கட்சியினர், அனைத்து சமுதாய அமைப்பு கள், வியாபார சங்கங்கள் என அனைவருக்கும் இந்த நேரத்தில் எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்பொழுது சிபிஐ விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. எங்களுக்கான நியாயத்தை நீதித்துறை வழங்கும் என்று நம்புகிறோம். அதற்கு தமிழக அரசும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று நாங்கள் பெரிதும் நம்புகிறோம். இந்த வழக்கை விரைவில் விசாரித்து, தவறு செய்தவர்களுக்கு தண்டனை விரைவில் வாங்கித் தர வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம் என்று கூறினார்.