தூத்துக்குடி, ஆக.23- தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., ஜெயக் குமார் கூறியதாவது:- மாவட்டத்தில் இது வரை ஊரடங்கை மீறியதாக 7981 வழக்கு பதிவு செய்யப்பட்டு 3529 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் சில வாகனங்கள் மட்டுமே தற்போது காவல் நிலையத்தில் வழக்குக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மணக்கரை சம்பவத்தில் கொல்லப் பட்ட துரைமுத்து உடல் மீது அரிவாளு டன் அடக்கம் செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு செய்யப்பட்டுள்ளது. இதன் பின் னணியில் இருப்பவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். சமூக வலை தளங்களில் சாதி ரீதியாக மோதலை ஏற் படுத்தும் வகையில் பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது என்று தெரிவித்தார்.