tamilnadu

img

தூத்துக்குடி துறைமுக லாரிகள் வேலை நிறுத்தம்.... கிளீனர்களை அனுமதிக்கக் கோரி போராட்டம்

தூத்துக்குடி:
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் துவங்கிய நாள் முதல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு சரக்குகள் ஏற்றச்செல்லும் லாரிகளில் டிரைவர்கள் மட்டுமே இருக்க வேண்டும்எனவும், கிளீனர்கள் உடன் செல்லக் கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் தூத்துக்குடி துறைமுகத் திற்குள் அடிக்கடி விபத்துகள் அதிகரிப்பதாகவும், கிளீனர்கள் இல்லாததால் ஓட்டுநர்கள்வாகனங்களை துறைமுகத் திற்குள் நெருக்கடியான நேரங்களில் இயக்குவதற்கு மிகவும்சிரமப்பட்டு வந்தனர்.

தற்போது கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்ட நிலையில் கிளீனர்களையும் துறைமுகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் எனக் கோரிதூத்துக்குடி லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் ஜெகன் பெரியசாமி தலைமையில் செயலாளர் முருகன் முன்னிலையில்  வேலை நிறுத்தம் நடை பெற்றது. இதன் காரணமாக துறைமுகத்தில் உள்ள எடை நிலையம் முன்பாக 100-க்கும்மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்து தெர்மல் நகர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து போக்குவரத்து மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிற புதன் கிழமைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனஉறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப் பட்டது.