tamilnadu

img

தூத்துக்குடி:தலித் தொழிலாளியை காலில் விழு வைத்த 7 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தலித் தொழிலாளியை காலில் விழவைத்த 7 பேர் மீது காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவர்களைக் கைது செய்துள்ளனர்.
கயத்தாறையடுத்துள்ள ஓலைகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆவுடைசங்கு மகன் பால்ராஜ் (55). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சங்கிலி மகன் சிவசங்கு (60) ஆகிய இருவரும் கடந்த 8-ஆம் தேதி திருமங்கலக்குறிச்சி கண்மாய் அருகே ஆடு மேய்த்தனர் அப்போது, பால்ராஜ் மேய்த்த ஆட்டுக்குட்டி ஒன்று சிவசங்கு மேய்த்த ஆட்டுக்கூட்டத்துக்குள் சென்றுள்ளது. இதையடுத்து, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. 
அப்போது  பால்ராஜ் கையில் வைத்திருந்த கம்பு சிவசங்கு நெற்றியில் பட்டதில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சிவசங்கு உள்பட அவரது உறவினர்கள் 7 பேரும் பால்ராஜ் வீட்டுக்குச் சென்று அவரை திருமங்கலக்குறிச்சி கண்மாய் அருகே அழைத்துச் சென்று, காலில் விழ வைத்துள்ளனர்.மேலும் சம்பவத்தை  இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளனர்.
மேலும்  காலில் விழுந்ததை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து பால்ராஜ்  காவல் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார். காவல்துறையினர் காலில் விழவைத்து மிரட்டி அதை சமூக வலைதளங்களில் பரப்பிய 7 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.