தூத்துக்குடி:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு காய்கறி ஏற்றி வந்த லாரி திங்கள் காலை 6 மணியளவில் தூத்துக்குடி 3-ஆம் கேட் மேம்பாலத்தில் வந்த போது மார்க்கெட்டுக்கு திரும்பும் வழியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மேம்பாலத்தில் இருந்து பாலத்தின் கீழே உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்திற்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் லாரி டிரைவர் ஓட்டன்சத்திரம் ராமலிங்கம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ்குமார் (36), கிளீனர் லட்சுமணன் (27) ஆகியோர் காயம் அடைந்தனர். தனியார் மருத்துவமனையில் நோயாளிகள் உட்பட அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. விபத்து குறித்து தூத்துக்குடி மத்தியபாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.