tamilnadu

எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுக்கு தமிழ் ரத்னா விருது முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

தூத்துக்குடி, அக்.23- நியூஸ் 7 தமிழ் தொலைக் காட்சி சார்பில் எழுத்தாளர் முத்தா லங்குறிச்சி  காமராசுக்கு தமிழ் ரத்னா விருதினை  முதல்வர் எடப் பாடி பழனிசாமி வழங்கினார். தமிழர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் வகையில், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் ”தமிழ் ரத்னா விருது” வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில், கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.  இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று விருதுகளை வழங்கி னார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழக முதல மைச்சரை நியூஸ் 7 தமிழின் நிர்வாக இயக்குனர் வி.சுப்பிர மணியன் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். விருது வழங்கும் விழாவில், கட்டைக்கூத்து ராஜகோபாலுக்கு “கலை ரத்னா விருதும், புகழ்பெற்ற தமிழறிஞர் டாக்டர்.தொ.பரமசிவத்திற்கு “இலக்கிய ரத்னா விருதும், பிரளயனுக்கு “நாடக ரத்னா விருதும் வழங்கி, முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி கவுரவித்தார். மேலும், “கேஸ்ட்லெஸ் கலக்டிவ்” குழுவினருக்கு “இசை ரத்னா விருதும்”, சதீஷ் சிவ லிங்கத்திற்கு”விளையாட்டு ரத்னா விருதும்”, ரவீந்திர குமாருக்கு சேவை ரத்னா விருதும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, “ஆசிரியர் ரத்னா விருது” பகவானுக்கும், “தொழில் ரத்னா விருது” சிபி.செல்வத்திற் கும், பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு”மகளிர் ரத்னா விருதும்” வழங்கி முதல்வர் எடப்பாடிபழனிசாமி கவுரவித்தார். “யுவ ரத்னா விருது” விழிய னுக்கும், “சக்தி ரத்னா விருது” நளீனா பிரசீதாவுக்கும், வழங்கப் பட்டது. “சிறப்பு விருது” அறிவிக் கப்பட்ட மறைந்த வசனகர்த்தா கிரேஸி மோகனுக்கு விருதை அவரது சகோதரர் மாது பாலாஜி பெற்றுக்கொண்டார். “மற்றொரு சிறப்பு விருது” தமிழ் ரத்னா விருதும், புகழ்மிக்க எழுத்தா ளரும், நெல்லை கவிநேசனின் நெருங்கிய எழுத்தாளமான முத்தாலங்குறிச்சி காமராசுக்கும் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. எம்.எஸ்.சுவாமிநாதன் சார்பாக அவரது நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமியிடம் இருந்து விருதை பெற்றுக் கொண்டார். இதையடுத்து, விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “அரசு திட்டங்களை செயல்படுத்த ஊடகங்கள் உந்து சக்தியாக உள்ளன. நியூஸ் 7 தமிழ் ஆண்டுதோறும் தமிழ் ரத்னா விருதுகள் வழங்குவது, சமூக அக்கறையை வெளிப் படுத்துகிறது. பசுமை புரட்சியின் நாயகன் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு, தமிழ் ரத்னா  விருது வழங்கியது போற்றத் தக்கது. டெங்கு ஒழிப்பு நட வடிக்கையில், அரசுடன் பொது மக்கள் ஒன்றிணைந்து செயல் பட்டால்தான், டெங்குவை ஒழிக்க முடியும்.  தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் அகழ்வ ராய்ச்சிகளை மாணவர்கள் பார்வையிட, தமிழக அரசு ஏற்பாடு செய்யும்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துரை வழங்கினார்.