tamilnadu

img

ஆசிரியர்களுக்கு ஹோமியோ மருந்துகள் வழங்கல்

தூத்துக்குடி , ஜூன் 6 தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு மேல்நி லைப்பள்ளி தலைமை ஆசி ரியர்கள் கழகம் சார்பில் கொரோனா ஒழிப்பு பணியில் உள்ள  ஆசிரியர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு  ஹோமியோபதி மருந்தான ஆர்செனிக்கம் ஆல்பம் - 30 சி மருந்துகள் அனைத்து முதுகலை மற்றும் தலைமை ஆசிரி யர்களுக்கு வழங்கப்பட்டது. அதற்கு முன்னதாக ஹோமியோபதி மருத்துவர் சங்க தலைவர் டாக்டர்.பெலிக்ஸ் கிளிப்போர்ட், டாக்டர்.பாதுஷா ஆகியோர் ஆர்செனிக் ஆல்பம் - 30 சி மருந்துகள் உட்கொள்ளும் முறை குறித்து விளக்கி பேசினர்.  தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞான கவுரி துவக்கி வைத்தார் .இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு ஊழி யர்கள் சங்க மாநில துணைத்  தலைவர் என்.வெங்கடே சன், மாவட்ட செயலாளர் தே.முருகன், தமிழ்நாடு மேல்நிலை தலைமை ஆசிரி யர்கள் கழக  மாநில அமைப்பு செயலாளர் ஞா. சேகர், தமிழ்நாடு முதுநி லைப் பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாவட்ட தலைவர் பிரான்சிஸ் ஹென்றி, மாவட்ட பொருளாளர் சங்கர சுப்பு, மாவட்ட இணைச் செயலாளர் கணேசன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;