tamilnadu

img

மராட்டியத்தில் ஸ்டிக்கர்! கர்நாடகத்தில் தடியடி! பாஜக ஆளும் மாநிலங்களின் அவலம்

:திருவனந்தபுரம், ஆக.12- மழையால் கேரளத்தைப்போல கர்நா டகா, மராட்டிய மாநிலங்களும் பாதிக்கப்பட் டுள்ளன. இதில் அவதிப்படும் மக்களுடன் இந்த இரு மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது. மராட்டியத்தில் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் படம் பொறித்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவதும் கர்நாடக முதல்வர் எடி யூரப்பா வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடச் சென்றபோது அவரது காவல்துறை பொதுமக்கள் மீது தடியடி நடத்தியதும் செய்தியாக வந்துள்ளன.  இந்த செய்திகளை கேரள நிலைமைக ளுடன் ஒப்பிட்டு முகநூல் பதிவில் சுபாஷ் நாராயணன் தெரிவித்துள்ளதாவது
மராட்டியம்
முதல்வரின் புகைப்படம் ஒட்டியே நிவார ணப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படுகி றது. 2 நாட்கள் வெள்ளத்தில் தவித்தவர்க ளுக்கு மட்டும் நிவாரணம் வழங்கினால் போதும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 2 நாட்கள் வெள்ளத்தின் அடியில் கிடந்து உயிர் மிஞ்சியிருந்தால் எதையாவது தருகிறோம் என்பது அங்குள்ள அரசின் நிலைப்பாடு.
கர்நாடகா
இங்கே பெரிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அனைத்தையும் இழந்த மக்கள் கொஞ்சம் நிவாரணம் கேட்டு முதல்வர் முன்பு சென்றபோது காவல்துறை யினரின் பங்குக்கு தடியடி கொடுத்தனர். இதைப்பார்த்து முதல்வர் காரிலேயே உட்கார்ந்து ரசிக்கிறார்.
கேரளம்
மக்களின் ஆதரவுடன் அனைவருக்கும் முன்மாதிரியான நிவாரண நடவடிக்கையை காட்சிப்படுத்திய மாநிலம் அங்குள்ள முதல்வரின் பெயரில் உள்ள நிவாரண நிதிக்கு நன்கொடை ஏதும் கொடுக்கக் கூடாது என்று சிலர் பரவலாக பிரச்சாரம் செய்கிறார்கள். அதற்காக அவர்கள் ரகசியமாக வேலை செய்கிறார்கள். இது ஒரு சிறந்த ஒப்பீடுமாகும். நல்லது என்றால் இப்போதே கூறிவிடுங்கள். இல்லை யென்றால் இனி கூற முடியாமல் போகலாம்.