தூத்துக்குடி, செப்.1- தாப்பாத்தி இலங்கை தமிழர் குடி யிருப்பு பகுதியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேரில் சென்று குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஊராட்சி ஒன்றியம், தாப்பாத்தியில் இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதி யில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ நேரில் சென்று குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, விளாத்திக் குளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப் பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது: தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமி ழர்களுக்கும், பிற நாட்டில், மாவட்டங்க ளில் வாழ்கின்ற தமிழர்களுக்கும் பாசம் என்பது தொடர்ந்து கொண்டே இருக்கும், குறிப்பாக இலங்கை தமி ழர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழ் கின்ற தமிழர்களுக்கும் தொப்புள் கொடி உறவு போல்பாசம் இருக்கும். இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, மத்திய அரசிற்கு கடிதம் எழுதி அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், அகதிகள் முகா மில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்ர திட முதல்வர்,அலுவலர்களுக்கு உத்த ரவிட்டுள்ளார் . அதனடிப்படையில், 1987ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த முகாமில் அடிப் படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வரை இந்த முகாமில் 328 குடும்பங்களை சார்ந்த 1296 நபர்கள் வசித்து வருகிறார்கள். 1 முதல் 5ம் வகுப்பு வரை 105 குழந்தை கள் படித்து வருகிறார்கள். இப்பள்ளி யில் மேலும், 2 ஆசிரியர்களை நிய மிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நடுநிலைப்பள்ளியாக உயர்த்துவ தற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தாழ்வாக செல்லும் மின்வயர்களை மாற்றி தரமான மின்வயர்களை மாற்றிட மின்சாரத்துறையின் மூலம் நடவ டிக்கை எடுக்கப்படும். 30 ஆயிரம் கொள் ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்திட நடவடிக்கை எடுக் கப்படும். இப்பகுதியில் வாழும் மக்கள் பயன் படுத்தும் வகையில் சுகாதார வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நீங் கள் இன்று முன் வைத்த கோரிக்கை களை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எந்தந்த பணிகள் நிறைவேற்றப்படுமோ அந்த பணிகள் உடனடியாக நிறை வேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சில கோரிக்கைகளை தமிழ் நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான பணி களும் மேற்கொள்ளப்படும் என தெரி வித்தார்.