தூத்துக்குடி, ஜூன் 27- சாத்தான்குளம் காவல்துறை யினரால் தாக்கப்பட்டு வியாபாரி களான தந்தை, மகன் மரணம டைந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை நீதிபதி அவர் களது குடும்பத்தினரிடம் விசா ரணை நடத்தினார். தூத்துக்குடி மாவட்டம், சாத் தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெய ராஜ். மரக்கடை நடத்தி வந்தார். இவரது மகன் பென்னிக்ஸ் செல் போன் கடை நடத்தி வந்தார். இவர்கள் ஊரடங்கு விதிமுறை யை மீறி கடைகளை திறந்து வைத் ததாகக் கூறி போலீசார் இரு வரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தனர். போலீசாரின் கொடூரச்செயலை பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டித்தன. வணிகர்கள் சங்கங் கள் சார்பில் மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடந் தது.
இதற்கிடையே உயர்நீதி மன்ற மதுரை கிளை தாமாக முன் முந்து இந்த சம்பவத்தை விசா ரிக்க முடிவு செய்தது. நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். மீண்டும் இந்த வழக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு வந்தது. இதில், கோவில்பட்டி 1வது மாஜிஸ்திரேட் சாத்தான்குளத் திற்கு நேரில் சென்று அங்கு சாட்சி களிடம் நேரடி விசாரணை நடத்தி, அதை பதிவு செய்யவேண்டும். கோவில்பட்டி சிறை, சாத்தான் குளம் காவல் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சி களை சேகரித்து பாதுகாக்க வேண் டும். இந்த வழக்கு வருகிற 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர். இதற்கிடையே தூத்துக் குடி மாவட்ட முதன்மை நீதிபதி லோகஸே்வரன், ஜெயராஜ் வீட் டுக்குச் சென்று அவரது மனைவி, மகள்களிடம் விசாரணை நடத்தி னார்.