தூத்துக்குடி, மே 24- தூத்துக்குடி மாவட்டத்தில் நுண்ணீர்ப் பாசனத் திட்டம் 2020-21 ஆம் நிதியாண்டில் ரூ.30 கோடி மானியத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் விவசாயிகள் பயன்பெ றுமாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக் கொ ண்டுள்ளார். தூத்துக்குடி மாவ ட்டத்தில் 2020-21 ஆம் நிதி யாண்டில் 4,315 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.30 கோடி மானியத்தில் நுண்ணீர்ப் பா சனத் திட்டம் செயல்படு த்தப்படவுள்ளது. நீராதாரம், மழைப் பொழிவு நாளுக்கு நாள் குறைந்து வருவதால் இருக்கும் தண்ணீரை சிக்க னமாகப் பயன்படுத்தி அதிக பரப்பில் பயிர் சாகுபடி செய்யும் நோக்கில் இத்தி ட்டத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சத வீத மானியத்தில் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசன கருவிகள் வழங்கப்பட வுள்ளன.
சிறு, குறு விவசாயிக ளுக்கு குறைந்தபட்சம் 0.40 ஹெக்டேர் முதல் அதிகபட்ச மாக 2 ஹெக்டேர் வரை ஒரு விவசாயி இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். இதர விவ சாயிகளுக்கு 75 சதவீத மானி யத்தில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசனத் கரு விகள் வழங்கப்படவுள்ளன. மேலும், நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தை செயல்படுத்தும் விவசாயிகளை ஊக்கு விக்கும் வகையில், பிரதம ரின் நுண்ணீர்ப் பாசனத் திட்ட த்தின் கீழ் துணை நீர் மேலாண்மை நடவடிக்கை கள் செயல்படுத்தப்பட்டு வரு கின்றன. இத்திட்டத்தில் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு பாசனம் செய்ய ஏதுவாக டீசல் மோட்டார் அல்லது மின் மோட்டார்கள், இணை ப்புக் குழாய்கள், ஆழ்து ளைக் கிணறுகள் மற்றும் தரைமட்ட நீர் சேமிப்பு கட்டமைப்பு அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நுண்ணீர்ப் பாசனத்தில் பதிவு செய்யும் விவசாயிகள் துணை நீர் மேலாண்மை சிறப்புத் திட்டத்திலும் பதிவு செய்து பயனடையலாம். இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் தாங்கள் பயரிடும் தோ ட்டக்கலைப் பயிர்களை அடங்கலில் பதிவு செய்வ துடன், குடும்ப அட்டை நகல், அடங்கல், கணினி சிட்டா, நில வரைபடம், சிறு, குறு விவ சாயிகளாக இருப்பின் இதற் காக வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட சான்று ஆகிய ஆவணங்களுடன் அருகிலி ருக்கும் வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநர் அலு வலகத்தை அணுகி பயன டையலாம். இத்திட்டத்தின் மூலம் காய்கறிப் பயிர்கள், பழப்ப யிர்கள் போன்ற தோட்டக் கலைப் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளும் பய னடையலாம். எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இவ்வாய்ப்பைப் பயன்ப டுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.