tamilnadu

எட்டயபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட பாரதியார் இல்லம் திறப்பு

 தூத்துக்குடி, ஆக.23- தூத்துக்குடி எட்டயபுரத்தில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட மகாகவி பார தியார் இல்லம் திறப்பு நிகழ்ச்சி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் சனியன்று நடைபெற்றது. செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ புதுப் பிக்கப்பட்ட இல்லத்தை திறந்து வைத்தார். அண்மையில் உடல்நிலை குறை வால் மரணமடைந்த பாரதியார் ஆய்வா ளர், எழுத்தாளர் இளசை மணியன் இல் லத்தில் அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்ன தாக கடலையூரில் வெள்ளையனே வெளி யேறு இயக்கத்தின் போது உயிரிழந்த 34 தியாகிகளின் நினைவாக வைக்கப் பட்டுள்ள நினைவுத்தூணுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.