tamilnadu

கொலை செய்யப்பட்ட பெண்ணின் குழந்தைகள் படிப்புச் செலவை ஏற்ற காவல்துறை அதிகாரி

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் சம்படி பகுதியைச் சேர்ந்தகணேசன் மனைவி செங்கமலம் (47). இவர் கடந்த செப்.12 அன்று கொலை செய்யப்பட்டார். இது குறித்து ஏரல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தனிப்படை அமைத்து 2 குற்றவாளிகளை கைது செய்தனர்.கொலையான செங்கமலத்தின் கணவர் 10 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். செங்கமலத்திற்கு 2 பெண்குழந்தைகள் மற்றும் ஒருஆண் குழந்தை உள்ளனர்.இவர்கள் தற்போது அவர்களது பெரியம்மா அஷ்டலெட்சுமி என்பவரின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர். அந்த குழந்தைகளுக்கு நிதியுதவி செய்ய வேண்டும்என்ற மனிதாபிமான அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல்கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ரூ.70 ஆயிரம்நிதியுதவி வழங்கினார். மேலும் அக்குழந்தைகள் மூவரின் படிப்புச் செலவையும் ஏற்பதாக மாவட்டகாவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

;