tamilnadu

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மருத்துவமனையில் திடீர் அனுமதி

தூத்துக்குடி,  ஜூலை 23 சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ஆய்வாளர் ஸ்ரீதர் வியாழனன்று திடீரென அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வணிகர் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் உள்ள ஸ்ரீதருக்கு முதுகு தண்டுவடத்தில் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறை மருத்து வர்கள் அவருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தனர். இதையடுத்து காவல் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.