tamilnadu

img

பெற்றோர்களின் கருத்துக்கள் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படும்... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தூத்துக்குடி:
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை மேற்கொண்டதன் விளைவாக தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் அரிப்பை தடுப்பதற்கு தடுப்புச்சுவர், தூண்டில்வளைவுகள் போன்றவை கூடுதலாக அமைப்பதற்கு அரசின் பரிசீலனையில் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பல கூட்டு குடிநீர் திட்டங்கள் இந்த மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆலந்தலை கிராமத்தில் ரூ. 52.60 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளது.
அல்லிக்குளம் பகுதியில் புதிய தொழில்பூங்கா அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணி அரசின் பரிசீலனையில் உள்ளது. விளாத்திகுளம் வட்டம், வைப்பார்கிராமத்தில் ஒரு தொழில் பூங்கா அமைக்க
1019 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் சிப்காட்நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்பூங்காவின் மூலம் சுமார் ரூபாய் 2000 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும்.சென்னை- கன்னியாகுமரி தொழில் பெருவழி திட்டத்தின் கீழ், திருச்செந்தூர் -பாளையங்கோட்டை வரை சுமார் 50 கிமீ நீளத்திற்கு ரூ. 165 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. சாத்தான்குளம் நகரத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்குவிரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிநடைபெற்று வருகிறது.தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர். தொற்றுப் பரவல் அதிகரித்து விடுமோ என்றுபெற்றோர்கள் கருதுகிறார்கள். பெற்றோர்களிடமிருந்து பெற்ற கருத்துகளின் அடிப்படையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்துமுடிவெடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.