tamilnadu

வெளி மாநில லாட்டரி விற்றவர் கைது

தூத்துக்குடி,ஜூலை 18- கயத்தார் அருகே வெளி மாநில லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த ஆட்டோ ஓட்டு நரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகே அய்யனாரூத்து கிராமத்தில் காவல் உதவி ஆய்வாளர்  ரவிசங்கர் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர் . அப்போது, அங்குள்ள டாஸ்மாக் அருகே ஆட்டோ ஓட்டுநர்  ஒருவர் வெளிமாநில லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் விசாரித்ததில் அவர்  நெல்லை மாவட்டம், வன்னிக்கோனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சங்கரபாண்டி மகன் மருதுபாண்டி (57)  என்பதும் சட்ட விரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்ததும் தெரியந்தது. இதையடுத்து மருதுபாண்டியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 84 லாட்டரி சீட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.