தூத்துக்குடி, ஜூன் 22- தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் ஊர டங்கால் மூடப்பட்டிருந்த நீதிமன்றங்கள் திங்க ளன்று முதல் திறக்கப்பட்டன. நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 அன்று முதல் நீதிமன்றங்கள் மூடப்பட்டன. இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டது. தூத்து க்குடியிலும் நீதிமன்றங்கள் மூடப்பட்டன. கோ யம்புத்தூர், மதுரை, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திரு வண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றங்கள் திங்களன்று முதல் செயல்பட துவங்கியது. தூத்துக்குடி நீதிமன்றத்தில் பொதுமக்க ளுக்கு அனுமதி இல்லை. ஆன்லைன் மூலம் பெயில், வாய்தா வழங்கப்படுகிறது. மனு க்களை அளிக்க 3 பெட்டிகள் வைக்கப்பட்டுள் ளன. முதல் பெட்டியில் மாவட்ட நீதிபதி, ஒன்று மற்றும் இரண்டாவது கூடுதல் நீதி மன்றம் போக்சோ, குடும்ப நல நீதிமன்றம், பிஜஎம், சிவில் வழக்குகளுக்கான மனுக்கள் போடப்படும் பெட்டியாகும். 2-வது பெட்டி யில் சார்பு நீதிபதி விசாரிக்கும் வழக்குக ளுக்கான மனுக்கள், 3-வது பெட்டியில் சிஜேஎம், ஜேஎம் 1,2,3,4, செக்மோசடி வழக்கு கள், நில மோசடி வழக்குகளுக்கான மனுக்கள் போடப்படும். திங்களன்று போடப்பட்ட மனுக்கள் புதனன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும். சிவில் வழக்குகள், இறுதி கட்ட விவாதம் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மனுதார ரின் வழக்கறிஞர், எதிர் மனுதாரரின் வழக்க றிஞர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். வழக்கறிஞர்கள் கோட் அணிய வேண்டாம் எனவும், வெள்ளை உடை அணிந்து விவா தத்தில் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு வழக்கறிஞருக்கு ஒரு நேரம் கொடுத்து அந்த நேரத்தில் மட்டும் வாதாடலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.