tamilnadu

img

தூத்துக்குடியில் கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் என்பவர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் திருச்சியை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பார்த்திபன் என்பவர் சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொரோனாவல் உயிரிழந்தவர் ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

இந்தியாவில் நேற்று 3,641 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 3,038 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுளள்து. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20,129ல் இருந்து 21,179 ஆக அதிகரித்துள்ளது.

;