tamilnadu

ஒருவர்  கைது

 தூத்துக்குடி, ஜூன் 18- தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி அருகேயுள்ள மேலகடம்பா கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் கணேசமூர்த்தி (42). ஜேசிபி ஆப ரேட்டர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமி யின் தாயார் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய் தார். புகாரின் பேரில் ஆய்வாளர் லட்சுமி பிரபா, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கணேசமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.