tamilnadu

img

தலித் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஆக.31- ஊரடங்கு காலத்திலும் தலித் மக்கள் மீது நடைபெறும் தாக்கு தலை கண்டித்தும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், தலித் ஊராட்சி தலைவர்களை தேசிய கொடியை ஏற்றவிடாமல் அவமதித்த சாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில்  தூத்துக்குடி சிதம்பர நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் க.காசி தலைமை தாங்கி னார். மாவட்டச் செயலாளர் பா. புவிராஜ், மாநில குழு உறுப்பினர் பி.பூமயில், மாவட்ட பொருளா ளர் வயணப் பெருமாள், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள் பேச்சிமுத்து, ராஜா, மாவட் டக் குழு உறுப்பினர்கள் பொன் ராஜ், சீனிவாசன், குமாரவேல், ஒன்றியச் செயலாளர் சங்கரன், புறநகர் செயலாளர் பா.ராஜா, வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.