tamilnadu

img

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு என்.95 மாஸ்க் : டி.எம்.பி., பவுண்டேசன் வழங்கியது

தூத்துக்குடி:
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு தன்னார்வ அமைப்புகள் தடுப்பு நடவடிக்கைக்கு உதவி வருகின்றன. 

இந்நிலையில் தூத்துக்குடி டி.எம்.பி., பவுண்டேசன் சார்பில் அரசு மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்களுக்கு ரூ.1.20 லட்சம் செலவில் 500 என்.95 மாஸ்க் வழங்கப்பட்டது.  இதை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி துனை பொதுமேலாளர் சுரேந்திரன், முதண்மை மேலாளர் முருகேசபாண்டியன், தெற்கு கிளை முதண்மை மேலாளர் குமரேசன் ஆகியோர் மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணியிடம் வழங்கினார்கள்.
 

;