tamilnadu

img

ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்களை பாதுகாக்கும் பணி தீவிரம்...

தூத்துக்குடி:
ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட 27 முதுமக்கள் தாழிகளும் பாதுகாக்க தொல்லியல்அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25-ம் தேதி அகழாய்வு பணி துவங்கியது. இந்த பணி கடந்த செப்டம்பர் 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அகழாய்வு பணியில் 27 முதுமக்கள் தாழிகள், பானைகள், தமிழ் பிராமி எழுத்துகள் என 500-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 

அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் அருகே உள்ள தகவல் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட 27 முதுமக்கள் தாழிகளையும் பாதுகாப்பாக வெளியே எடுக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அகழாய்வு இயக்குனர் பாஸ்கர், தொல்லியல் அலுவலர் லோகநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர்.இதில் முழுமையாக எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் தனியாகவும், உடைந்த நிலையில் கிடைத்த முதுமக்கள் தாழிகள் தனியாகவும் பத்திரப்படுத்தப்பட்டன. அனைத்து முதுமக்கள் தாழிகளும் அருகே உள்ள தகவல் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அடுத்த வாரம் இதில் முழுமையாக எடுக்கப்பட்ட 7 முதுமக்கள் தாழிகள் தவிர மற்ற அனைத்து உடைந்த முதுமக்கள் தாழிகள் அனைத்தும் ஒட்ட வைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். மேலும் எடுக்கப்பட்ட பொருள்கள் பற்றியதகவல்கள் சேகரிக்கப்படும் என தொல்லியல் இயக்குனர் பாஸ்கர் தெரிவித்தார்.

தற்போது தொல்லியல் சம்பந்தப்பட்ட பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தொடர்ந்த வழக்கு கடந்த 6-ந் தேதி விசாரணைக்கு வந்தது. 2004 நடந்த ஆதிச்சநல்லூர் அறிக்கையை உடனேவெளியிட வேண்டும் என அறிவுறுத்தி யுள்ளனர். வரும் 16-ந் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இதற்கிடையில் மத்திய தொல்லியல் துறையினர் தொல்லியல் படிப்புக்கு தமிழை புறக்கணித்த வகைக்கு கடும் எதிர்ப்பு தமிழர்கள் மத்தியில் கிளம்பியது. நீதிபதிகளும் இதை வன்மையாக கண்டித்தனர். இந்நிலையில் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் தற்போது அகழாய்வு பொருட்களை பாதுகாக்கும் பணி விரை/வாக நடைபெறுவது தொல்லியல் ஆர்வலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.