tamilnadu

மே 27-ல் தூத்துக்குடியில் 7 இடங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள்

தூத்துக்குடி, மே 19- தூத்துக்குடி மாவட்டத்தில் 7 இடங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மே  27 ஆம் தேதி தொடங்குகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு நடந்தது. மார்ச்  மாத இறுதியில் கொரோனா தடுப்பு நடவ டிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டது. இதனால் பல்வேறு சிரமங்க ளுக்கு இடையே மாணவர்கள் பிளஸ்-2  தேர்வு எழுதினர். இந்த விடைத்தாள் திருத்தும்  பணிகள் மே 27 ஆம் தேதி தொடங்கும் என்று  அரசு அறிவித்து உள்ளது. அதன்படி தூத்துக் குடி மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணிகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தூத்துக்குடியில் ஏற்கனவே தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நி லைப்பள்ளி, கோவில்பட்டி சி.கே.டி மேல்நி லைப்பள்ளி ஆகிய இடங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறுவதாக இருந்தது.

கொரோனாவையொட்டி, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் இந்த 2 மையங்கள் தவிர, கூடுதலாக 5 உப  மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.  இந்த மையங்களில் ஒவ்வொரு வகுப்ப றையிலும் முதன்மை தேர்வர் தலைமையில், கூர்ந்தாய்வாளர், 6 உதவி தேர்வர் என  மொத்தம் 8 பேர் விடைத்தாள் திருத்தும் பணி யில் ஈடுபட உள்ளனர். இதையொட்டி விடைத் தாள் திருத்தும் மையங்களில் கிருமிநா சினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படு கிறது.  செவ்வாய்க்கிழமை விடைத்தாள் கட்டு கள் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தன. அதனை அந்தந்த விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு சென்று வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டு உள்ளன. விடைத்தாள் திருத்தும் மையங்க ளில் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. மேற்கண்ட தகவலை தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞான கவுரி தெரிவித்தார்.

;