tamilnadu

img

மாஜிஸ்திரேட்டை மிரட்டிய காவல் அதிகாரிகளைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி,ஜூன் 30- சாத்தான்குளம் காவல்துறையினரால் தாக்கப்பட்டு தந்தை-மகன் கொல்ல சம்பவத்தில் ஆவணங்களை கேட்ட நீதித்துறை மாஜிஸ்திரேட்டை  மிரட்டிய  காவல்துறை அதிகாரிகளைக் கண்டித்து தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூன் 30 செவ்வாயன்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தந்தை- மகன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்கச் சென்ற மாஜிஸ்திரேட்டை காவல்துறையினர் மிரட்டியதாக  உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளரிடம் இ-மெயில் மூலமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதித்துறையை மிரட்டும் காவல்துறையை கண்டித்தும், சாத்தான்குளம் சம்பவத்தில் காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில்  கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ரசல், கே.பி.ஆறுமுகம், இரா.பேச்சிமுத்து, எஸ்.அப்பாதுரை, தா.ராஜா, மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.