tamilnadu

ஆன்லைன் விசாரணையின்போது ஆபாசமாக பேசிய வழக்கறிஞருக்கு அபராதம்

தூத்துக்குடி, ஜூன் 11- தூத்துக்குடியில் ஆன்லைன் வழக்கு விசாரணையின் போது ஆபாசமாக பேசிய வழக்கறிஞருக்கு நீதிமன்றம் அப ராதம் விதித்துள்ளது.  தூத்துக்குடியில் ஆன்லைன் மூல மாக நடைபெற்ற வழக்கு ஒன்றின் விசா ரணையின் போது சாலையோரத்தில் நின்று வழக்கறிஞர் ஒருவர் ஜாமீன் வழக்கில் வாதாடி கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்ற கார் சத்தத்துடன் சென் றதால் உணர்ச்சி வசப்பட்ட வழக்கறிஞர், ஓட்டுனரை ஆபாசமாக திட்டியுள்ளார். வழக்கறிஞர் திட்டியதை ஆன்லைனில் கேட்ட மாவட்ட நீதிமன்ற நீதிபதி, வழக்க றிஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கறி ஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த நீதிபதி ரூ.100 அபராதம் விதித் தார். வழக்கறிஞர் குறித்து தமிழ்நாடு பார் கவுன்சிலில் நீதிபதி புகார் தெரி வித்துள்ளார்.