தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன் குடியிருப்பைச் சேர்ந்தவர் தணிஸ்லாஸ் மகன் செல்வன்(35). இவரை கடந்த 17ஆம் தேதி மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்று அடித்து கொலை செய்துஉடலை கடக்குளம் பகுதியில் வீசி சென்றனர். இக்கொலை தொடர்பாக தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல்உள்ளிட்ட 6பேருக்கு தொடர்பிருப்பதாக அவரது தாயார் எலிதபெத் திசையன்விளை போலீசில்புகார் செய்தார்.
புகாரின் பேரில் திசையன்விளை இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர், தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்ளிட்ட 6பேர் மீது வழக்கு பதிந்தனர். இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி புதன் மாலை சொக்கன்குடியிருப்பு வந்து படுகொலை செய்யப்பட்ட செல்வனின் மனைவி ஜீவிதா மற்றும் அவரதுகுடும்பத்தினரிடம் ஆறுதல்கூறினார். இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ 5லட்சம் நிதியதவி வழங்கினார்.