tamilnadu

img

திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் கனிமொழி எம்.பி. ஆய்வு

தூத்துக்குடி
திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலா் த.பொன்ரவியிடம்  கனிமொழி  எம் பி, கரோனா தடுப்பு சிகிச்சை குறித்த முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்ததுடன், மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார்.    தொடா்ந்து கரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவையும் அவா்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூய்மைப் பணியாளா்களுக்கு உதவி
திருச்செந்தூா் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் கோபால், சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல்முருகன் ஆகியோரிடம்  நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப் பணிகள் குறித்து கனிமொழி கேட்டறிந்தார். தொடா்ந்து, 86 பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அரிசி உள்ளிட்ட நலஉதவிகளை அவா் வழங்கினார். இதே போல், உடன்குடியில் , ஆறுமுகனேரி போரூராட்சியில் உள்ள தூய்மைப்பணியாளா்களுக்கும் அவா் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அரிசி உள்ளிட்ட அத்யாவசிய பொருள்களை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

;