தூத்துக்குடி, ஜூலை 12- “தூத்துக்குடி மாநகராட்சியில் மீண்டும் முழு ஊரடங்கை அமல் படுத்த வேண்டும்” என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலும் தினமும் பாதிப்பு அதிகரித்து வரு கிறது. சனிக்கிழமை மட்டும் 175 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட னர். தூத்துக்குடியில் பிரையண்ட் நகர், அமுதாநகர், டூவிபுரம், கிருஷ்ணராஜபுரம் உள்பட மாநக ராட்சி பகுதியில் மட்டும் 62 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது. கொரேனாவால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இறந்த வர்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தூத் துக்குடி மாவட்டத்தில் கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 2 ஆயிரத்து 124-ஆக அதி கரித்து உள்ளது. இதனால் முழு ஊர டங்கை அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருக்கு, தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு மாநில துணைத் தலைவர் வெற்றிராஜன் அனுப்பியுள்ள மனு வில், கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் காலத்தில் மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக பணியாற்றி வருகிறது.
தற்போது தூத்துக்குடி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களையும், அனைத்து சமு தாய பணியாளர்களையும் காக்கும் பொருட்டு மீண்டும் மாநகராட்சி பகு திகளில் முழு ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரம்பத்தில் கொரோனா தொற்று மிகவும் குறைவாகவே இருந்தது. அதன் பிறகு வெளிமாநிலங்கள் மற் றும் சென்னையில் இருந்து வரு வோர் மூலம் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. இது கடந்த ஒரு வாரமாக உச்சத்தை எட்டியுள்ளது. தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 200-ஐ நெருங்கி வருகிறது. கட்டுக் கடங்காமல் செல்வதால் மதுரை யைப் போன்று தூத்துக்குடியிலும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண் டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.