தூத்துக்குடி, ஆக.11- பிரச்சனைகளை தீர்க்க உப்ப ளங்களுக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்வேன் என உழைக்கும் பெண்கள் கூட்டமைப்பு மாநாட்டில் தூத்துக்குடி எம்பி கனிமொழி உறுதி கூறினார். ஜனநாயக உழைக்கும் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் உப்பள மீனவ விவசாய பெண் தொழிலாளர்களின் உரிமை மாநாடு தூத்துக்குடி கால்டு வெல் காலனி சபிதா சங்கர் மஹாலில் நடைபெற்றது.மாநாட்டிற்கு அமைப்பா ளர் ராமலட்சுமி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நான்சிலி வர வேற்புரையாற்றினார். மாநாட்டில் தூத்துக்குடி எம்பி. கனிமொழி கலந்து கொண்டார் அவர் பேசியதாவது உங்க ளின் கோரிக்கைகள் திமுக வின் தேர்தல் அறிக்கையில் உள்ளது. அவை செயல் படும் காலம் வந்துள்ளது. நானே நேரடி யாக உப்பளத்திற்கு வந்து உங்கள் பிரச்சனைகளை தெரிந்து கொள்ள உள்ளேன். உங்களின் கோரிக்கைகள் குறித்து மத்திய மாநில அரசிடம் கூறி தீர்வு காண முயற்சிப்பேன். உங்க ளுக்கு துணையாக என்றும் இருப்பேன் என கூறினார். கூட்டத்தில் கீதாஜீவன் எம்எல்ஏ. அமைப்பு சாரா தொழிலாளர் கூட்ட மைப்பு கிருஷ்ணமூர்த்தி. உழைக்கும் பெண்கள் கூட்டமைப்பு ஆலோசகர் ஜூலியட் தெரசிட்டா, வீட்டு வேலை தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பா ளர் மனோன்மணி கூட்டமைப்பு ஒருங்கி ணைப்பாளர் மகேஸ்வரி நன்றி கூறி னார். கூட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய- மாநில அரசு கள் தாங்கள் சார்ந்த உப்பள நிலங்களை உப்பள பெண் தொழிலாளர்களுக்கே நேரடியாக குத்தகைக்கு விட வேண் டும். மழை கால நிவாரணம் வழங்க வேண்டும். மீன் கருவாட்டை அனைத்து பேருந்துகளிலும் கொண்டு செல்ல அனுமதி, மீன் பதப்படுத்தும் நிறுவ னங்களில் 8 மணி நேர வேலை, ஊதி யத்துடன் வாரவிடுமுறை, பெண் தொழி லாளர்கள் பாதுகாப்பு, உப்பள பெண் தொழிலாளர்களுக்கு சுத்தமான குடி நீர்,கழிவறை,காலணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய தர வேண் டும் என வலியுறுத்தப்பட்டன.