tamilnadu

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 150 பேருந்துகள் இயங்க தயாராக உள்ளது மாவட்ட ஆட்சியர் பேட்டி

தூத்துக்குடி, மே 31- தூத்துக்குடி மாவட்டத்தோடு தொடர்பு டைய மண்டலங்களில் இயக்குவதற்காக 150 பேருந்துகள் தயார் நிலையில் உள்ள தாக மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி தெரி வித்தார். சுதந்திர போராட்ட வீரர் வெள்ளைய தேவனின் 251வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவசிலைக்கு மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி மாலை அணிவித்து மரி யாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களி டம் அவர் பேசியதாவது: அடுத்த வருடம் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையதேவன் முழு வெண்கல சிலை அமைக்கப்படும். மேலும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வரு கிறது.  நேற்று வரை மாவட்டம் முழுவதும் 11292 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை நடைபெற்றுள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து தினசரி ஏராளமா னோர் குணமடைந்து வீடுகளுக்கு செல்கின்றனர். குஜராத்,மஹாராஷ்டிரா, மற்றும் வெளியூர்களிலிருந்து வந்த நபர் களால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி தூத்துக்குடி திருநெல்வேலி உள்ளிட்ட 4 மண்டலங்களுக்கான பேருந்து போக்கு வரத்து நாளை(திங்கள்) முதல் தொடங்கும். 150 பேருந்துகள் வரை இயங்க தயார் நிலையில் உள்ளது. ஜுன் 2 ம் தேதி இலங்கை யிலிருந்தும், ஜுன் 7 ம் தேதி மாலத்தீலி ருந்தும், மேலும் ஈரான் நாட்டிலிருந்தும் தூத்துக்குடிக்கு கப்பல்கள் வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் வந்த வுடன் முறையாக சோதனை செய்யப்படு வார்கள். தொடர்ந்து அவர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டு அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பபடுவார்கள்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.