tamilnadu

காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு நிதியுதவி  

தூத்துக்குடி, ஆக.31- தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே துரைமுத்து என்ற குற்றவா ளியை பிடிக்கச் சென்ற போது அவர் தன் கையில் வைத்திருந்த நாட்டு வெடி குண்டை வீசியதில் காவலர் சுப்பிரமணி யன் வீர மரணமடைந்தார். இந்நிலையில் காவல்துறை சார்பாக நிதி பங்களிப்பு  தொகையாக ரூ.86,50,000 காசோலையை திங்களன்று மதுரை தென் மண்டல ஐ.ஜி முருகன், பண்டார விளையில் உள்ள காவலர் சுப்பிரமணியன் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தாரிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.