தூத்துக்குடி,ஜூலை 4- திருவைகுண்டத்தில் வாழைப் பயிர்கள் சூறைக்காற்றில் சேதமான தால் விவசாயி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவை குண்டம் சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் வடிவய்யா மகன் திருவடி (28), இவரது மனைவி தேவசுந்தரி. இந்த தம்பதியருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. திருவடி ஸ்ரீவை குண்டம் அருகே வெள்ளூர் கிராமத்தில் வாழை பயிரிட்டு இருந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வீசிய பலத்த காற்றில் வாழை பயிர்கள் சேதமாகின. இதனால் அவர் மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் வெள்ளியன்று அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவைகுண்டம் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.