tamilnadu

கொரோனா தொற்றால் பொறியாளர் உயிரிழப்பு தூத்துக்குடியில் பலி 3 ஆக உயர்வு

தூத்துக்குடி, ஜூன் 13- தூத்துக்குடியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பொறியாளர் உயிரி ழந்தார். இதையடுத்து வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக அதி கரித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை என்ற ஊரைச் சேர்ந்த 34 வயது இளைஞர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்தது வந்துள்ளார். கடந்த ஜூன் 7 அன்று கடுமையான காய்ச்சல்  காரணமாக கோவில்பட்டி அரசு மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்தம், சளி மாதிரியை பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவருக்கு தொற்றின் தீவிரம்  அதிகமாக இருந்ததால் அவரை தூத்துக்குடி  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த  அவர் வெள்ளியன்று நள்ளிரவு உயிரிழந்தார்.  தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்கனவே 2 பேர் உயிரி ழந்துள்ளனர். இந்நிலையில், வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது மூன்றாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்த பொறியா ளரின் உடல் சனிக்கிழமை காலை அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் உரிய பாது காப்பு முறையோடு ஆம்புலன்சில் மையவா டிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி  15 அடி ஆழத்தில் உடலை பாதுகாப்பான முறையில் சுகாதாரப் பணியாளர்கள் அடக்கம்  செய்தனர்.