தூத்துக்குடி:
மின் வாரியத்தை சீரழிக்கின்ற மின்வாரியஊழியர்களின் நலனை பாதிக்கின்ற தமிழ்நாடுமின் வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரின் நடவடிக்கைகளை கண்டித்து தூத்துக்குடி அனல் மின் நிலையம் முன்புஅனைத்து தொழிற்சங்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலச் செயலாளர் அப்பாத்துரை, தெர்மல்செயலாளர் கணபதி சுரேஷ், ஏஐடியுசி முத்துகுமார், பொறியாளர் கழகம் பிறைசூடி, பொறியாளர் சங்கம் அரியசெல்வம், அம்பேத்கர் எம்ப்ளாயீஸ் யூனியன் முருகன், ஐஎன்டியூசி பாலகிருஷ்ணன், திமுக ஆரோக்கியசாமி, ஐக்கிய சங்கம் நயினார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.