தூத்துக்குடி, பிப்.18- தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே என்டிபிஎல் தொழி லாளர்கள் தங்கள் கோரிக் கைகளை வலியுறுத்தி குடும் பத்தினருடன் சிஐடியு தலை மையில் கண்டன ஆர்ப்பாட் டம் நடத்தினர். தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழி லாளர்களை நிறுவனத்தின் நிரந்தர ஊழியராக அறி வித்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண் டும், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பண் டிகை விடுமுறை, தேசிய விடு முறை வழங்கி போனஸ் வழங்கிட வேண்டும், உள் ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கடந்த ஆறு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில் சனிக்கிழமை அன்று தூத் துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே என்டிபிஎல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர் கள் தங்களது குடும்பத்தினரு டன் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதற்கு சிஐடியு மாவட் டத் தலைவர் பேச்சிமுத்து தலைமை வகித்தார். மாநில செயலாளர் ரசல் முன்னிலை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் எஸ்.கண்ணன் சிறப்புரை ஆற்றி னார். என்டிபிஎல் அனல் நிலைய திட்டச் செயலாளர் அப்பாதுரை கோரிக்கை விளக்க உரையாற்றினார். இதில் சிபிஎம் மாவட்டச் செய லாளர் கே.பி.ஆறுமுகம், மாநகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் சங்க ரன், புறநகர் செயலாளர் ராஜா, மற்றும் என்.வெங்க டேசன், சுரேஷ், கார்த்தி மற்றும் சிஐடியு நிர்வாகிகள் உள் ளிட்ட ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள் தங்க ளது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.